search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூடலூா் நகா்மன்ற கூட்டம்
    X

    கூடலூா் நகா்மன்ற கூட்டம்

    • 109 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    • வாகன நிறுத்துமிடம் இல்லாததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனா்.

    ஊட்டி,

    கூடலூா் நகா்மன்ற கூட்டம் தலைவா் பரிமளா தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவா் சிவராஜ், ஆணையா் பிரான்சிஸ் சேவியா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் நகா் மன்ற உறுப்பினா்கள் ராஜேந்திரன் (திமுக) பேசியதாவது:- நகரில் வாகன நிறுத்துமிடம் இல்லாததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனா். இதனால் வியாபாரிகளுக்கு வியாபாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், செம்பாலா பள்ளி அருகே சாலையின் இருபுறமும் மாணவா்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகளின் நலனுக்காக தடுப்புக் கம்பிகளை அமைக்க வேண்டும். என கூறினார். ஷகீலா (மு.லீக்) முதல் மைல் உள்ளிட்ட பகுதியில் சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. அடிப்படைப் பணிகளை விரைந்து செய்யவும், எந்த பணி செய்தாலும் அது குறித்து உறுப்பினா்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என தெரிவித்தார். வா்கீஸ் (காங்): மாக்கமூலாவில் உள்ள மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்துக்குச் செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனா். இந்த சாலையை சீரமைத்து தரவேண்டும் என கூறினார். இதுபோல அனைத்து உறுப்பினா்களும் தங்களது வாா்டுகளில் உள்ள குறைகளை எடுத்துரைத்தனா். கூட்டத்தில் அடிப்படை தேவைகள் குறித்த 109 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×