search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முக்கூடல் அருகே பேரன் இறந்த துக்கத்தில் தாத்தா தற்கொலை
    X

    முக்கூடல் அருகே பேரன் இறந்த துக்கத்தில் தாத்தா தற்கொலை

    • முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடி போலீஸ் நிலையம் ரோட்டை சேர்ந்தவர் வேலையா (வயது 60). விவசாயி. இவரது பேரன் செல்வம் (18).
    • நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை வேலையா பரிதாபமாக இறந்தார்.

    நெல்லை:

    முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடி போலீஸ் நிலையம் ரோட்டை சேர்ந்தவர் வேலையா (வயது 60). விவசாயி. இவரது பேரன் செல்வம் (18). இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. அவரை வேலையா கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் அவர் இறந்து விட்டார். இதனால் மனமுடைந்த வேலையா நேற்று முன்தினம் விஷத்தை குடித்து மயங்கி கிடந்தார்.

    அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை வேலையா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாப்பாக்குடி போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×