என் மலர்
உள்ளூர் செய்திகள்

பட்டமளிப்பு விழா
- கிண்டர் கார்டன் மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.
- நாட்டின் வளர்ச்சியில் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக திகழ வேண்டும் என கூறினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி பாரத் இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளியில் கிண்டர் கார்டன் மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது. இதற்கு பள்ளி நிறுவனர் மணி தலைமை தாங்கினார். தாளாளர் கிருஷ்ணவேணி மணி வரவேற்றார். இதில் மாவட்ட கல்வி அலுவலர் முனிநாதன் கலந்து கெண்டு பேசினார்.
அவர் பேசும் போது இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியாவின் எதிர்காலம், நமது நாட்டின் தூண்கள். மாணவர்கள் அறிவியல் மேதைகளாகவும், சிறந்த மருத்துவர்களாகவும், பொறியியல் வல்லுனர்களாகவும், கலெக்டர்களாகவும் நாட்டின் வளர்ச்சியில் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக திகழ வேண்டும் என கூறினார்.
இதில் பள்ளியில் படிக்க கூடிய கிண்டர் கார்டன் மாணவ, மாணவிகளுக்கு பட்ட மளித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். முடீவில் பள்ளியின் இயக்குனர் டாக்டர் சந்தோஷ், பள்ளி செயலாளர் உஷா சந்தோஷ் ஆகியோர் நன்றி கூறினார்கள். இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர் ஹரிநாத் மற்றும் பள்ளியின் ஆசிரிய, ஆசிரியைகள் செய்திருந்தனர்.