அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

பிளஸ்-2 படித்த நண்பர்களின் சந்திப்பு கூட்டம் கடத்தூரில் உள்ள நடைபெற்றது.கடந்த கால நிகழ்வுகளையும், பள்ளி அனுபவங்களையும் நினைவு கூறி மகிழ்ந்தனர்.
முன்னாள் மாணவ, மாணவியர்கள் புகைப்படம் எடுத்து கொண்ட காட்சி.
முன்னாள் மாணவ, மாணவியர்கள் புகைப்படம் எடுத்து கொண்ட காட்சி.
Published on

 பாப்பிரெட்டிப்பட்டி,

தருமபுரி மாவட்டம், கடத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1994-ம் ஆண்டு பிளஸ்-2 படித்த நண்பர்களின் சந்திப்பு கூட்டம் கடத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.

கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு இப்பள்ளியில் படித்த மாணவ-மாணவிகள் தற்போது பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்ற மாணாக்கர்கள் தங்களுடைய கடந்த கால நிகழ்வுகளையும், பள்ளி அனுபவங்களையும் நினைவு கூறி மகிழ்ந்தனர்.மேலும் 23 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com