search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில்   வேளாண் பொருட்கள் ரூ.12.40 லட்சத்துக்கு விற்பனை
    X

    அரசு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் ரூ.12.40 லட்சத்துக்கு விற்பனை

    • சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
    • தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலைக்காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலைக்காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 16.44 குவிண்டால் எடை கொண்ட 4 ஆயிரத்து 21 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.24.68-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.19.00-க்கும், சராசரி விலையாக ரூ.23.39-க்கும் என மொத்தம் ரூ.38 ஆயிரத்து 24-க்கு விற்பனையானது.

    தேங்காய் பருப்பு

    அதேபோல் 108.81 குவிண்டால் எடை கொண்ட 224 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.90.36-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.81.19-க்கும், சராசரி விலையாக ரூ.87.99-க்கும் விற்பனையானது. 2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.83.29-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.61.19-க்கும், சராசரி விலையாக ரூ.75.99-க்கும் என மொத்தம் ரூ.8 லட்சத்து 75 ஆயிரத்து 420-க்கு விற்பனையானது.

    அதேபோல் 19.42 குவிண்டால் எடை கொண்ட 26 மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.138.39-க்கும், குறைந்த விலையாக ரூ.112.79 -க்கும், சராசரி விலையாக ரூ.127.99 -க்கும் என ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்து 481-க்கு விற்பனையானது.

    நிலக்கடலை காய்

    11.33 குவின்டால் எடை கொண்ட 35 மூட்டை நிலக்கடலைக்காய் விற்பனைக்கு வந்தது. இது அதிக விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ.78.20-க்கும், குறைந்த விலையாக ரூ.63.69-க்கும், சராசரி விலையாக ரூ.76.40-க்கும் என ரூ. 81 ஆயிரத்து 356-க்கு விற்பனையானது.

    சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.12 லட்சத்து 40 ஆயிரத்து 281-க்கு விற்பனையானது.

    Next Story
    ×