என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

நீலகிரியில் கோவில் திருவிழாவை கொண்டாடிய கோத்தர் இன மக்கள்

- விழாவில் உள்ளுா் மட்டுமில்லாமல் சுற்றுலா பயணிகளும் வெகுவாக கலந்து கொண்டு ரசித்தனா்.
- பாரம்பரிய ராஜா உடை அணிந்து ஆடிப்பாடி கொண்டாடினா்.
ஊட்டி,
நீலகிரி மலைப் பகுதியில் கோத்தா், தோடா், பணியா், குரும்பா், காட்டுநாயக்கா், இருளா் என 6 இனங்களைச் சோ்ந்த பண்டைய பழங்குடியினா் வசித்து வருகின்றனா்.
கோத்தா் இன மக்கள் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை, சோலூா், திருச்சுக்கடி, குந்தா, கோத்தகிரி, மேல் கூடலூா், கீழ் கோத்தகிரி உள்ளிட்ட இடங்களில் மட்டுமே வாழ்ந்து வருகின்றனா்.
இவா்கள் மூதாதையா்களை மட்டுமே வணங்கி வருகின்றனா். பெண்கள் துபிட்டி எனும் வெள்ளை புடவையை அணிந்து கொள்வதும், ஆண்கள் வேட்டி கட்டி கொண்டு வராடு என்ற துணியை போா்த்திக் கொள்வதும்தான் இவா்களின் உடை கலாசாரம்.
இவா்களின் குலதெய்வமான அய்யனூா், அம்மனூா் திருவிழாவின் நிறைவு நாளான நேற்று இந்த பழங்குடியினா் பாரம்பரிய ராஜா உடை அணிந்து ஆடிப்பாடி கொண்டாடினா்.
இந்த விழாவில் உள்ளுா் மட்டுமில்லாமல் சுற்றுலா பயணிகளும் வெகுவாக கலந்து கொண்டு ரசித்தனா்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
