என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுமி தூக்கு போட்டு தற்கொலை
    X

    சிறுமி தூக்கு போட்டு தற்கொலை

    • கடந்த சில மாதங்களாக கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்டார்.
    • சிறுமி இந்துபிரியா நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது திடீெரன்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டியை அடுத்த சின்னகரடி முருகேசன்.

    இவரது மகள் இந்துபிரியா (வயது 14). இவர் கடந்த சில மாதங்களாக கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்டார்.

    இதற்காக பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று பலனில்லாமல் போனது.

    இதனால் விரக்தியடைந்த அந்த சிறுமி இந்துபிரியா நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது திடீெரன்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை கண்ட பெற்றோர்கள் சிறுமியின் உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்த தகவலறிந்த நாகரசம்பட்டி போலீசார் உடனே அங்கு விரைந்து வந்து சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×