என் மலர்
உள்ளூர் செய்திகள்

இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை
- கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
- மனமுடைந்து காணப்பட்ட துர்கா நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே ஏ.ஜெட்டிஅள்ளி அடுத்துள்ள அலசபள்ளி பகுதியை சேர்ந்தவர் அஜித். இவரது மனைவி துர்கா (வயது25). இவர் பெங்களூருவில் மருத்துவக்கல்லூரியில் லேப் டெக்னிசியன் படித்து வந்தார்.இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் இருவரும் தனிதனியாக வாழ்ந்து வருகின்றனர். இந்தநிலையில் மனமுடைந்து காணப்பட்ட துர்கா நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பேரிகை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






