என் மலர்
உள்ளூர் செய்திகள்

தூக்கில் தொங்கி இளம்பெண் தற்கொலை
- மன உளைச்சலில் நந்தினி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- ஓசூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ரெங்கசாமி பிள்ளை தெருவை சேர்ந்தவர் முனிராஜ். இவரது மகள் நந்தினி (வயது 22).
இவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் குணமடையவில்லை. இந்த மன உளைச்சலில் நந்தினி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது தந்தை முனிராஜ் கொடுத்த புகாரின்பேரில் ஓசூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல ஹட்கோ போலிஸ் சரகத்தில் சொல்லகிரி அருகேயுள்ள ஆருபள்ளியை சேர்ந்த மஞ்சுநாதன் (31) என்பவர் குடிபோதையில் கெலவரப்பள்ளி டேம் சப்பளம்மால் கோவில் அருகே குன்றில் ஏறியவர் தவறி கீழே விழுந்து உயிரிழந்தார்.
இது குறித்து அவரது தம்பி சின்னப்பன் கொடுத்த புகாரின்பேரில் ஹட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






