search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிலக்கோட்டை அருகே  கஞ்சா விற்றவர் கைது
    X

    நிலக்கோட்டை அருகே கஞ்சா விற்றவர் கைது

    • மட்டப்பாறை பஸ்நிலையத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக விளாம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து மேலும் அவரை கைது செய்தனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே உள்ள விளாம்பட்டி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த ஜெயராஜ்(45).

    இவர் மட்டப்பாறை பஸ்நிலையத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக விளாம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து விளாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா தலைமையில் போலீசார் விரைந்து சென்று ஜெயராஜை கையும், களவுமாக பிடித்து அவரிடம் இருந்த ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    மேலும் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற உத்தரவுப்படி திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×