search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கஞ்சா போதையில் வியாபாரிகளை அடித்து அட்டூழியம் செய்த சிறுவர்கள்
    X

    கஞ்சா போதையில் வியாபாரிகளை வெறித்தனமாக தாக்கும் சிறுவர்கள்.

    கஞ்சா போதையில் வியாபாரிகளை அடித்து அட்டூழியம் செய்த சிறுவர்கள்

    • கஞ்சா போதைக்கு அடிமையான சிறுவர்கள், இளை ஞர்கள் செயின் பறிப்பு, திருட்டு போன்ற சம்பவங்களில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது.
    • சிவகங்கை பூங்கா செல்லும் வழியில் சாலையோரத்தில் கடை வைத்திருந்த பாணிபூரி கடைக்காரரை 4-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கஞ்சா போதையில் அடித்து தாக்கியுள்ளனர்.

    தஞ்சாவூர்: –

    தஞ்சாவூர் நகர் பகுதிக ளில், பல இடங்களில் கஞ்சா விற்பனைநடந்து வருகிறது. பள்ளி சிறுவ ர்கள் முதல் கல்லுாரி இளைஞர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை கும்பல் படுஜோராக தொழிலில் கொடிக்காட்டி பறந்து வருகின்றனர்.

    கஞ்சா போதைக்கு அடிமை யான சிறுவ ர்கள்,இளை ஞர்கள் செயின் பறிப்பு, திருட்டு போன்ற சம்பவங்களில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. கஞ்சா போதையில் கடந்த மாதம் கரந்தை பகுதியில் அரிவாளை காட்டியும், வியாபாரிகளை தாக்கியும் பணம் கேட்டு மிரட்டி தாக்கினர். இதில் ஒரு வியாபாரி மரணம் அடைந்தார்.இந்த நிலையில் மீண்டும் கஞ்சா போதையில் சில சிறுவர்கள் வியாபாரிகளை அடித்து ரவுடியிசம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அதன் பற்றிய விவரம் வருமாறு:-

    தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா செல்லும் வழியில் சாலையோரத்தில் கடை வைத்திருந்த பாணிபூரி கடைக்காரரை 4-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கஞ்சா போதையில் அடித்து தாக்கியுள்ளனர். அவர் பயத்தில் அலறி ஓடினார். அதன் பிறகு அங்கிருந்த பழக்கடையில் பழங்களை எடுத்து வியாபாரி மீது வீசி ரகளை செய்தனர். தொடர்ந்து அந்தப் பகுதியில் ரவுடியிசத்தில் ஈடுபட்டனர். இதனை பார்த்த சமூக ஆர்வலர்கள் வேதனை அடைந்தனர்.கஞ்சா போதையில் இளைஞ ர்களின் வாழ்க்கை சீரழிந்து வருகிறது என எண்ணி வருத்த மடைந்தனர். உடனடியாக தஞ்சை மாவட்டத்தில் கஞ்சா புழக்கத்தை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். வியாபாரியை சிறுவர்கள் தாக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    Next Story
    ×