என் மலர்
உள்ளூர் செய்திகள்

பயங்கர ஆயுதங்களுடன் கொள்ளைக்கு திட்டமிட்ட கும்பல்
- போலீசார் பொன்மலை கோவில் பகுதியில் ரோந்து சென்றனர்.
- தப்பி ஓடிய நியாமத், சேது, ஷாருக்கான், வடிவேல் ஆகிய 4 பேரை வலை வீசி தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் பொன்மலை கோவில் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அப்பகுதியில் உள்ள மாந்தோப்பு ஒன்றில் ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி கொள்ளை சம்பவங்களில் ஈடுபட திட்டமிட்டது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை மடக்க முயற்சித்தபோது வஞ்சி (எ) சதீஷ்குமார் (வயது 29) என்பவர் சிக்கினார். மற்ற நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இதையடுத்து சதீஷ்குமறை கைது செய்து சிறையில் அடைத்தனர். அங்கிருந்து தப்பி ஓடிய நியாமத், சேது, ஷாருக்கான், வடிவேல் ஆகிய 4 பேரை வலை வீசி தேடி வருகின்றனர்.
Next Story






