search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்னமனூரில் தாய், மகனை தாக்கிய கும்பல்
    X

    கோப்பு படம்.

    சின்னமனூரில் தாய், மகனை தாக்கிய கும்பல்

    • சின்னமனூர் வெள்ளையன் தெருவை சேர்ந்தவர் தனது பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
    • அப்போது வழியில் நின்றிருந்த பைக் மீது மோதினார்.

    சின்னமனூர்:

    சின்னமனூர் வெள்ளையன் தெருவை சேர்ந்தவர் ராஜேஸ்(24). இவர் தனது பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் நின்றிருந்த அருண் என்பவரது பைக் மீது மோதினார். இதனால் ஆத்திரமடைந்த அருண் மற்றும் அவரது நண்பர்கள் ராஜேசை தாக்கினர்.

    இதனை தடுக்க வந்த ராஜேசின் தாய் செல்வியையும் கடுமையாக தாக்கி வீட்டில் புகுந்து பொருட்களை சூறையாடி உள்ளனர். காயமடைந்த ராஜேஸ் சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து சின்னமனூர் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×