search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காந்திநகர் ஏ.வி.பி. பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா
    X

    காந்திநகர் ஏ.வி.பி. பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

    • இயேசு கிறிஸ்துவின்பிறப்பை விளக்கும் வகையில் கிறிஸ்துமஸ் குடில் தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்தது.
    • கிறிஸ்துமஸ் விழாவின் சிறப்பை ஆசிரியர்களின் பாடல்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஆடல், பாடல்களின் மூலமாக விளக்கினர்.

    திருப்பூர் :

    திருப்பூர் காந்திநகர் ஏ.வி.பி. டிரஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இதில் இயேசு கிறிஸ்துவின்பிறப்பை விளக்கும் வகையில் கிறிஸ்துமஸ் குடில் தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்தது.

    கிறிஸ்துமஸ் தாத்தா நிகழ்ச்சியின் இடையில் வந்து குழந்தைகளை குதூகலப்படுத்தி ஆடி பாடினார். இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளான கிறிஸ்துமஸ் விழாவின் சிறப்பை ஆசிரியர்களின் பாடல்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஆடல், பாடல்களின் மூலமாக விளக்கினர்.

    விழாவில் பள்ளி தாளாளர் கார்த்திகேயன், பொருளாளர் லதா கார்த்திகேயன், முதல்வர் டயானா, ஒருங்கிணைப்பாளர் வித்யா ரிஸ்வான் ,ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×