search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேதாரண்யேஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டி உற்சவம் தொடக்கம்
    X

    வேதாரண்யேஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டி உற்சவம் தொடக்கம்

    • வேதாரண்யேஸ்வரர் திருக்கோவில் ஆறுமுக சுவாமிக்கு கந்த சஷ்டி உற்சவம் நடந்தது.
    • வரும் 18-ந்தேதி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம் ஹார நிகழ்வு நடை பெறும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் திருக்கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது.

    அகத்திய முனிவருக்கு சிவபெருமான் தம்பதி சமேதரராய் திருமண காட்சி அளித்த தலம், நான்கு வேதங்களும் பூஜித்த தலம்.

    இந்த கோவிலின்உட்பிர காரத்தில் வள்ளி, தேவயானை சமேத ஆறுமுகக்கடவுள் அமைந்துள்ளது.

    இந்த ஆறுமுக சுவாமிக்கு கந்த சஷ்டி உற்சவத்தை முன்னிட்டு நேற்று 13.11.2023 மாலை சிறப்பு யாகசாலை பூஜைகள் நடந்தது.

    பின்னர் அலங்கரிக்கப்பட்ட சுப்பிர மணியசுவாமி கேடயத்தில் நான்கு வீதிகளில் வீதியுலா காட்சி நடந்தது.

    விழா நாட்களில் மயில் வாகனத்தில் எழுந்தருளி தினசரி வீதியுலா நடை பெறும்.

    வரும் 18.11.2023 அன்று இரவு வேதாரண்யம் மேலவீதியில் விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம் ஹார நிகழ்வு நடை பெறும்.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் உபயதாரா்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

    Next Story
    ×