search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இலவச வேட்டி, சேலைகள் வழங்கும் பணி தொடக்கம்
    X

    இலவச வேட்டி, சேலைகள் வழங்கும் பணி தொடக்கம்

    • குடும்ப அட்டை தாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டது.
    • 84,651 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி தாசில்தார் சம்பத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பொங்கல் பண்டிகைக் காக, கிருஷ்ணகிரி தாலுகாவில் உள்ள நியாயவிலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டை தாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டது. இதில், சேலைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தது.

    தாசில்தார் அலுவலத் திற்கு ஒதுக்கப்பட்ட தலா ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 302 வேட்டி, சேலைகளில், 84,651 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. மீதமுள்ள 32 ஆயிரத்து 651 சேலைகள் மட்டும் தாசில்தார் அலுவலகத்தில் இருப்பில் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் முழு ஒதுக்கீட்டிற்கு ஏற்றவாறு கடந்த 4-ந் தேதி 27 ஆயிரம் வேட்டிகளும், 5-ந் தேதி 5 ஆயிரத்து 651 வேட்டிகளும் வரப்பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து நேற்று முதல் நிலுவையில் உள்ள ரேஷன் கடைகளுக்கு மீதமுள்ள இலவச வேட்டி, சேலைகள் வினியோகம் செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×