என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவமனை சார்பில், இலவச மருத்துவ முகாம்
- ஓசூரில் செயல்பட்டு வரும் செயின்ட் பீட்டர்ஸ் மருத்து வக் கல்லூரி மருத்துவமனை சார்பில், ஓசூர் ஜுஜு வாடியில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
- மருத்துவக் குழுவினர் கலந்து கொண்டு நோயாளிகளுக்கு உடல் பரிசோதனை செய்து, மருத்துவ ஆலோசனைகள் வழங்கினர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் செயல்பட்டு வரும் செயின்ட் பீட்டர்ஸ் மருத்து வக் கல்லூரி மருத்துவமனை சார்பில், ஓசூர் ஜுஜு வாடியில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
ஜூஜுவாடி மாநகராட்சி தொடக்க பள்ளியில் நடந்த முகாமிற்கு, மாநகராட்சி நகரமைப்பு குழு தலைவரும், அ.தி.மு.க. பகுதி செயலா ளருமான அசோகா தலை மை தாங்கி தொடங்கி வைத்தார்.
மாநகராட்சி கல்விக்குழு தலைவர் ஸ்ரீதரன் முன்னி லை வகித்தார். இதில் டாக்டர்கள் நீரவ், சுபாஷ், தீபிகா உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் கலந்து கொண்டு நோயாளிகளுக்கு உடல் பரிசோதனை செய்து, மருத்துவ ஆலோசனைகள் வழங்கினர்.
மருந்து,மாத்திரைகளும் இலவ சமாக வழங்கப்பட்டது.இதில், மருத்துவமனையின் மார்க்கெட்டிங் பிரிவு துணை மேலாளர் செந்தில் குமார், பள்ளி தலைமை யாசிரியர் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.






