search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவிலில் இலவச திருமணம்
    X

    கோவிலில் இலவச திருமணம்

    • தூத்துக்குடி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பார்த்திபன் தலைமையில் முருகன் என்பவருக்கும், வினிதா என்பவருக்கும் இலவச திருமணம் நடைபெற்றது.
    • மணமக்களுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பிலான திருமாங்கல்யம் மற்றும் சீர்வரிசை பொருட்கள் கோவில் சார்பாக வழங்கப்பட்டது.

    தென்திருப்பேரை:

    பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மணமக்களுக்கு திருமணம் செய்து வைப்பதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டம் காந்தீஸ்வரம் ஏகாந்தலிங்க சுவாமி கோவிலில் நேற்று தூத்துக்குடி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பார்த்திபன் தலைமையில், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சங்கர் முன்னிலையில், குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவில் நிதி மூலம் நாங்குநேரி வட்டம் கீழ அரியகுளத்தை சேர்ந்த மணமகன் முருகன் என்பவருக்கும், ஆழ்வார்திருநகரி பத்தவாசலை சேர்ந்த மணமகள் வினிதா என்பவருக்கும் இலவச திருமணம் நடைபெற்றது. மணமக்களுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பிலான திருமாங்கல்யம் மற்றும் சீர்வரிசை பொருட்கள் கோவில் சார்பாக வழங்கப்பட்டது.

    Next Story
    ×