search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலங்குளம் அருகே 290 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள்
    X

    விழாவில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கியபோது எடுத்த படம்.

    ஆலங்குளம் அருகே 290 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள்

    • இலவச சைக்கிள் வழங்கும் விழாவிற்கு தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமை தாங்கினார்.
    • நிகழ்ச்சியில் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கடங்கநேரி பஞ்சாயத்து ரெட்டியார் பட்டி கிராம கமிட்டி மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.

    தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி, யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், ஒன்றிய செயலாளர்கள் செல்லதுரை, அன்பழகன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் சமுத்திர பாண்டியன், ஆலடி எழில்வானைன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் குகன் வரவேற்று பேசினார்.

    விழாவில் பள்ளியில் படிக்கும் 290 மாணவ,மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்களை தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் மணிகண்டன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ரமேஷ், ஒன்றிய விவசாய தொழிலாளர் அணி பாலகுமார், ஒன்றிய கவுன்சிலர் சுபாஷ் சந்திரபோஸ், கிளை செயலாளர் கணேசன், மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×