search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி அருகே ரூ.9 லட்சத்திற்கு காசோலை கொடுத்து மோசடி
    X

    கோப்பு படம்.

    தேனி அருகே ரூ.9 லட்சத்திற்கு காசோலை கொடுத்து மோசடி

    • காசோலையை வங்கியில் வசூலுக்காக கொடுத்த போது கையெழுத்து மாறியுள்ளதாக திரும்பி வந்துவிட்டது.
    • வங்கி கணக்கில் ரூ.2லட்சத்ைத அனுப்பி வைத்து பின்னர் பொருட்கள் வாங்கி தரவில்லை.

    தேனி:

    தேனி அருகே பழனி செட்டி பட்டியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(67). இவரும், இவரது உறவினர் செந்தில்குமார்(45) என்பவரும் வீட்டில் உள்அல ங்காரம் தொழிலை அபிவிரு த்தி செய்ய முடிவு செய்தனர். அதன்படி செந்தில்குமார் ரூ.9 லட்சத்தை கடனாக கேட்டார். 3 மாதத்தில் திருப்பி தருவதாக தெரி வித்துள்ளார்.

    இதனைதொடர்ந்து பன்னீர்செல்வம் அவருக்கு பணம் கொடுத்துள்ளார். அதன்பின்னர் காசோலை மூலம் பணத்தை தருவதாக செந்தில்குமார் தெரிவித்து ள்ளார். அந்த காசோலையை வங்கியில் வசூலுக்காக கொடுத்த போது கையெழுத்து மாறியுள்ளதாக திரும்பி வந்துவிட்டது. இதுகுறித்து கேட்டபோது எந்தபதிலும் இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பன்னீர்செல்வம் தேனி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு அளித்தார்.

    கோர்ட்டு உத்தரவுப்படி பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குபதிவு செய்து செந்தில்குமாரிடம் விசாரித்து வருகின்றனர்.

    தேனி அருகே மாரியம்ம ன்கோவில்பட்டியை சேர்ந்தவர் பிரித்தி விராஜ்(32). இவர் கணினி விற்பனை மற்றும் சர்வீஸ் சென்டர் வைத்துள்ளார். மதுரை சிம்மக்கல் பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவரு டன் பழக்கம் ஏற்பட்டு இணையதளம் மூலம் பொரு ட்கள் வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பிரித்திவிராஜ் தினேசின் வங்கி கணக்கில் ரூ.2லட்சத்ைத அனுப்பி வைத்தார். ஆனால் அதன்பின்னர் பொருட்கள் வாங்கி தரவில்லை. மேலும் செல்போனையும் சுவி ட்ச்ஆப் செய்து விட்டதால் மதுரைக்கு சென்றார். அங்கு தினேஷ் கடையை காலி செய்து விட்டதாக அருகில் இருந்த வர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து தேனி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவுப்படி பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×