என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி மாணவி உள்பட 4 பெண்கள் மாயம்
    X

    பள்ளி மாணவி உள்பட 4 பெண்கள் மாயம்

    • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி மாணவி உள்பட 4 பெண்கள் மாயமானார்கள்.
    • உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    அஞ்செட்டி அருகே உள்ள உரிகம் கிராமத்தைச் சேர்ந்தவர் 23 வயது இளம்பெண் திருமணம் ஆனவர். இவர் கடந்த 26-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மாயமானார்.

    அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது கணவர் அஞ்செட்டி போலீசில் புகார் செய்தார். அதில் உரிகத்தை சேர்ந்த சந்திரன் என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதேபோல் கல்லாவி அருகே உள்ள ஓலப்பட்டியை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். தனியார் நிறுவன ஊழியர். கடந்த 21-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    அது குறித்து பெற்றோர் கல்லாவி போலீசில் புகார் செய்தனர். அதில் ஓலப்பட்டியை சேர்ந்த சதாம் உசேன் (25) என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதேபோல் கிருஷ்ண கிரியை அடுத்த நெக்குந்தியை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவர், கடந்த 25-ந் தேதி காலை தான் படித்த கல்லூரியில் மாற்று சான்றிதழ் வாங்கி வருவதாக கூறி தர்மபுரிக்கு சென்றார். மீண்டும் வீடு திரும்பவில்லை.

    இது குறித்து அவரது பெற்றோர் கே.ஆர்.பி., டேம் போலீசில் புகார் செய்தனர். அதில் நெக்குந்தியை சேர்ந்த ஜெகதீஷ் (25) என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதேபோல் கிருஷ்ணகிரி அருகில் உள்ள பகுதியை சேர்ந்தவர், 17 வயது பிளஸ்-2 மாணவி. கடந்த 20-ந் தேதி வீட்டிலிருந்து வெளியில் சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை.

    அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. மாணவியின் பெற்றோர் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் புகாரளித்தனர். அதில், கொங்க னப்பள்ளியை சேர்ந்த பேக்கரி கடை ஊழியர் சதீஷ் (20) என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×