என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சந்தனமரம் கடத்திய 4 பேருக்கு அபராதம்
- வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ரோந்து பணி மேற்கொண்டனர்.
- தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள ஜவளகிரி வனச்சரகம் சந்திரன் ஏரி சரக பகுதியில் வனச்சரகர் சுகுமார் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது வனப்பகுதியில் சுற்றித்திரிந்த ராயக்கோட்டை அருகேயுள்ள போடம்பட்டி கிராமத்தை சேர்ந்த குப்புராஜி (வயது 25), சந்திரன் (40), மாது (27), சாரண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்த தேவராஜ் (22) ஆகிய 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் வைத்திருந்த சாக்கு மூட்டையில் 16 கிலோ சந்தன மர கட்டைகள் இருந்தன. அவர்களிடம் நடத்திய விசாரணையில் சந்தன மரங்களை வெட்டி சாக்கு மூட்டையில் எடுத்து செல்வது தெரிந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த வனத்துறையினர் வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி முன்பு ஆஜர்படுத்தி தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்