search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கால்நடை பன்முக மருத்துவமனை கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா
    X

    கால்நடை பன்முக மருத்துவமனை கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா

    • ஓசூரில் 3 கோடியே 5 லட்சம் மதிப்பில் கால்நடை பன்முக மருத்துவமனை கட்டிடம் அமைக்கப்பட வுள்ளது.
    • இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், கால்நடை பராமரிப்பு துறை சார்பில், ஓசூரில் 3 கோடியே 5 லட்சம் மதிப்பில் கால்நடை பன்முக மருத்துவமனை கட்டிடம் அமைக்கப்படவுள்ளது.

    இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில், ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, ஆகியோர் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர்.

    மேலும் இதில், துணை மேயர் ஆனந்தய்யா, 24-வது வார்டு மாமன்ற உறுப்பினர் மஞ்சம்மா, மற்றும் துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×