என் மலர்
உள்ளூர் செய்திகள்

தற்கொலை செய்த கள்ளக்காதல் ஜோடி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை
- மரியசெல்வம் (45) என்பவருக்கும், சவுரியம்மாளுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது.
- 2 பேரும் அந்த பகுதியில் உள்ள ஒரு புளிய மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
அஞ்செட்டி,
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள பிலிகுண்டுலு கிராமத்தைச் சேர்ந்தவர் சவுரியம்மாள் (வயது 45). கூலித்தொழிலாளி.
இவருடைய கணவர் குழந்தைசாமி. இவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து அதே ஊரை சேர்ந்த மரியசெல்வம் (45) என்பவருக்கும், சவுரியம்மாளுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது.
இதனிடையே மரியசெல்வம் மதுபோதையில் சவுரியம்மாளிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். நேற்று முன்தினமும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனிடையே அவர்கள் 2 பேரும் அந்த பகுதியில் உள்ள ஒரு புளிய மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இதை பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள், உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் போலீசுக்கு தெரிவிக்காமல் 2 பேரின் உடல்களையும் கிராமத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அஞ்செட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் தற்கொலை செய்து கொண்ட கள்ளக்காதல் ஜோடி 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து அஞ்செட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






