கொடைக்கானலுக்கு மீண்டும் வரத்தொடங்கிய வெளிநாட்டு பறவைகள்

கடந்த சில நாட்களாகவே நகர்பகுதியின் விரிவாக்கத்தால் சிட்டுக்குருவிகளின் ரிங்காரம் குறைந்துள்ளது.தற்போது பிளாக் அண்ட் ஆரஞ்சு, பிளைகேட்சர், ஒயிட்பால்டி, லாபிங்திரஸ் உள்ளிட்ட பறவைகளின் வருகை அதிகரித்துள்ளது.
கொடைக்கானல் மலைப்பகுதியில் காணப்படும் வெளிநாட்டு பறவைகள்.
கொடைக்கானல் மலைப்பகுதியில் காணப்படும் வெளிநாட்டு பறவைகள்.
Published on

கொடைக்கானல்:

மலைகளின் இளவரசியான கொடைக்கானலைச் சுற்றி இயற்றை எழில் கொஞ்சும் மலைகள் மற்றும் காடுகள் உள்ளன. இங்கு ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. கடந்த சில நாட்களாகவே நகர்பகுதியின் விரிவாக்கத்தால் சிட்டுக்குருவிகளின் ரிங்காரம் குறைந்துள்ளது.

மேலும் பல அரியவகை பறவைகள் அழியும் நிலையில் உள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் பறவைகளின் வருகையும் குறைவாகவே இருந்தது.

கொரோனா ஊரடங்கு காரணமாக மலைப்பகுதியில் வாகனங்கள் எண்ணிக்கை குறைந்தது. மேலும் காற்று மாசும் குறைந்ததால் வனப்பகுதியில் புத்துயிர் பெற்று சிட்டுக்குருவிகள் சத்தம் கேட்கதொடங்கியுள்ளது.பாம்பே சோலை, மதிகெட்டான்சோலை, புலிச்சோலை உள்ளிட்ட காடுகளில் பிளாக் அண்ட் ஆரஞ்சு, பிளைகேட்சர், ஒயிட்பால்டி, லாபிங்திரஸ் உள்ளிட்ட பறவைகளின் வருகை அதிகரித்துள்ளது.

மேலும் வெளிநாட்டு பறவைகளான அக்கிடெல்லா, ஏசியன்குயில், ஜெசினா வகைகளும் வரத்தொடங்கியுள்ளதால் வனப்பகுதி உற்சாகமிக்க இடமாக மாறியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com