என் மலர்
உள்ளூர் செய்திகள்

விளையாட்டு பயிற்சியாளர் பணிக்கு2-ந்தேதி சான்றிதழ் சரிபார்ப்பு
- விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் 87 நிரந்தர பயிற்றுநர் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
- இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டது.
சேலம்:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தடகளம், வில்வித்தை, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து, வாள்சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், கைப்பந்து, வளைகோல்பந்து, ஜுடோ, கபாடி, கோ-கோ, நீச்சல், டென்னிஸ், டேக்வாண்டோ, கையுந்துபந்து, பளுதூக்குதல், மல்யுத்தம் மற்றும் வூசு ஆகிய விளையாட்டுக்களுக்கான 87 நிரந்தர பயிற்றுநர் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவிக்கபப்ட்டது. அதன்படி 530-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக பெறப்பட்டுள்ளன.
அவற்றில் முதல் நிலையாக அனைத்து இனங்க ளிலும் தகுதி பெற்ற 225 விண்ணப்ப தாரர்களுக்கான 2-ம் நிலை தேர்வுகள் கடந்த ஜனவரி 29-ந்தேதி நடைபெற்றது. முதல் மற்றும் 2-ம் நிலை தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற 189 விண்ணப்ப தாரர்களுக்கு 3-ம் நிலை தேர்வாக வருகிற 2-ந்தேதி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதி திறன் தேர்வு நடத்தப்பட உள்ளது.
இதில் கலந்து கொள்வ தற்கான அழைப்புக் கடிதம் தபால் மூலமும், அவரவர் மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
எனவே, அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்ட விண்ணப்பதாரர்கள் 2-ந்தேதி காலை 7 மணிக்குள் சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளை யாட்ட ரங்கில் நடைபெற உள்ள சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதி திறன் தேர்வுகளில் கலந்து கொள்ள வேண்டும். இதில் கலந்து கொள்ள இயலாதவர்களுக்கு யாதொரு மறு வாய்ப்பும் வழங்கப்படாது என்று தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.






