என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கானஓய்வூதிய உதவித்தொகை பெறலாம்
    X

    முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கானஓய்வூதிய உதவித்தொகை பெறலாம்

    • 3.1.2023ம் தேதியன்று 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
    • தமிழ்நாடு சார்பில் போட்டிகளில் பங்கேற்றவர்களாகவும் இருத்தல் வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    நலிந்த நிலையிலுள்ள முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதிய உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-

    விளையாட்டுத் துறையில் சர்வதேச அல்லது தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று, தற்போது நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தை சேர்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.6 ஆயிரம் வீதம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதள முகவரி www.sdat.tn.gov.in வாயிலாக வரவேற்கப்படுகிறது. சர்வதேச அல்லது தேசிய போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும். அல்லது சர்வதேச அல்லது தேசிய போட்டிகளில் பங்கேற்றிருத்தல் வேண்டும். மத்திய அரசினால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகள், அகில இந்திய பல்கலைக்கழங்களுக்கு இடையேயான போட்டிகள், இந்திய ஒலிம்பிக் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளனங்களால் நடத்தப்பட்ட சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள், மத்திய அரசின் விளையாட்டு அமைச்சகம், இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். 3.1.2023ம் தேதியன்று 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாகவும், தமிழ்நாடு சார்பில் போட்டிகளில் பங்கேற்றவர்களாகவும் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் மாத வருமானம் ரூ.15 ஆயிரத்திற்குள் இருத்தல் வேண்டும். மத்திய அரசின் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம், மாநில அரசின் ஓய்வூதியம் பெறுபவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை. முதியோர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளான வெட்ரன்ஸ், மாஸ்டர்ஸ் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை. எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரியில் (www.sdat.tn.gov.in) வருகிற 19ந் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பித்து பயனடைய கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×