என் மலர்
உள்ளூர் செய்திகள்

எல்லை பாதுகாப்பு படை வீரருக்கு 21 குண்டுகள் முழங்க அஞ்சலி
- ராஜ்குமார் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நல குறைவு காரணமாக காலமானார்.
- பாதுகாப்பு படை வீரர்கள் 21 குண்டுகள் முழங்க மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.
காரிமங்கலம்,
காரிமங்கலம் அடுத்த நாகனம்பட்டி ஊராட்சி சங்கனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 36). இவர் எல்லை பாதுகாப்பு படை வீரராக டில்லி அருகே பணிபுரிந்து வந்தார்.
ராஜ்குமார் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நல குறைவு காரணமாக காலமானார். அவருடைய உடல் நேற்று மதியம் அவருடைய சொந்த ஊரான சங்கனம்பட்டி கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டது.
அங்கு எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 21 குண்டுகள் முழங்க மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.
வட்டாட்சியர் சுகுமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன், தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், வருவாய் ஆய்வாளர் மணி மணி மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் அவருடைய உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இறந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் ராஜ்குமாருக்கு சித்ரா என்ற மனைவியும் ஒரு மகன், ஒரு மகள் ஆகியோர் உள்ளனர்.






