என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரியில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க உணவு பொருள்கடத்தல் தடுப்பு போலீசார் சோதனை
    X

    கிருஷ்ணகிரியில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க உணவு பொருள்கடத்தல் தடுப்பு போலீசார் சோதனை

    • ஆந்திர மாநில எல்லையையொட்டி உள்ள சோதனை சாவடிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • அரிசி கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

    கிருஷ்ணகிரி,

    தமிழக உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. காமினி உத்தரவின் பேரில் கோவை மண்டல போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி மேற்பார்வையில், சேலம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணவேணி, திபாகர மற்றும் போலீசார் அரிசி கடத்தலை தடுக்க தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    அவர்கள் 2 குழுக்களாக பிரிந்து மாநில எல்லைகளான கர்நாடக மாநில எல்லையை ஒட்டி உள்ள சோதனைச்சாவடி மற்றும் ஆந்திர மாநில எல்லையையொட்டி உள்ள சோதனை சாவடிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    இது குறித்து உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கூறுகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக பக்கத்து மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகாவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுகிறதா? என்று தீவிரமாக கண்காணித்து வருகிறோம். அரிசி கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

    Next Story
    ×