என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலசப்பாக்கம் கோவில்களில் அன்னதானம்
    X

    கலசப்பாக்கம் கோவில்களில் அன்னதானம்

    • எடப்பாடி பழனிசாமிக்கு அங்கீகாரம்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    செங்கம்:

    கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட காஞ்சி குண்று மேடு பாலசுப்ரமணியர் கோவில், புதூர் மாரியம்மன் கோவிலில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் தலைமையில் சிறப்பு அபிஷே கங்கள் நடைபெற்றது.

    புதூர் மாரியம்மன் கோவிலில் தேர் இழுத்து சிறப்பு அபிஷேகங்கள் செய்து பொதுமக்களுக்கு வி.பன்னீர்செல்வம் அன்னதானம் வழங்கினார்.

    இதேபோல புதுப்பாளையம் ஒன்றியம் காஞ்சி குன்றுமேடு பாலசுப்பிரமணியர் கோவிலில் உள்ள மூலவர்களுக்கு வி.பன்னீர்செல்வம் சிறப்பு அபிஷேகங்கள் செய்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் பொய்யாமொழி, ஆலத்தூர் கே.மூர்த்தி, காரப்பட்டு ரமேஷ், பேரூர் செயலாளர் ராதா உட்பட முக்கிய நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×