search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பனி பொழிவால் வெறிச்சோடிய பூ மார்க்கெட்
    X

    பனி பொழிவால் வெறிச்சோடிய பூ மார்க்கெட்

    • பருவநிலை மாற்றத்தால் மார்கழி தை முடிந்தும் வறட்சி பனிப்பொழிவும் கடும் வெயிலும் வாட்டி வதைத்து வருகிறது.
    • செண்டுமல்லி முற்றிலும் விளைச்சல் தடைப்பட்டுள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் முத்து கவுண்டன் கொட்டாய், கடகத்தூர், அதகபாடி, தொப்பூர், நார்த்தம்பட்டி, நல்லம்பள்ளி, காரிமங்கலம், கடத்தூர், பொம்மிடி, கம்பைநல்லூர், பாலக்கோடு, மொரப்பூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் பூக்கள் பயிரிட்டு வருகின்றனர்.

    குறிப்பாக குண்டுமல்லி, சன்னமல்லி, கனகாம்பரம், ஜாதிமல்லி, செவ்வலரி, வெள்ளை அலரி, காக்கண்ணாம், சம்பங்கி மற்றும் சாமந்தி பூக்கள் அதிகப்படியாக சாகுபடி செய்வதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.இந்த கிராமங்களில் சாகுபடி செய்யப்படும் பூக்கள் பெரும்பாலும் தருமபுரி டவுன் பஸ் நிலையத்தில் உள்ள பூ மார்க்கெட்டுக்கு கொண்டுவரப்படுகிறது.

    இங்கிருந்து விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்து, ஈரோடு, திருச்செங்கோடு, கோயம்புத்தூர், பெங்களூர், சென்னை, சேலம் உள்ளிட்ட மாநகரங்களுக்கு பிக்கப் வாகனம் மற்றும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. ஏற்றுமதி செய்யப்படும் பூக்கள் தவிர மற்ற பூக்கள் அனைத்தும் தருமபுரி பூ மார்க்கெட்டில் சில்லரை வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் தருமபுரி மாவட்டத்தில் மார்கழி மாதத்தில் கடும் பனிப்பொழிவு இருந்து வரும் இந்த வருடம் பருவநிலை மாற்றத்தால் மார்கழி தை முடிந்தும் வறட்சி பனிப்பொழிவும் கடும் வெயிலும் வாட்டி வதைத்து வருகிறது.

    இதனால் பூக்கள் விளைச்சலில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பூக்கள் விளைச்சல் இன்றி தினசரி மார்க்கத்திற்கு பெரும்பாலான குண்டுமல்லி, சாமந்தி, சம்பங்கி, அரளி, கனகாம்பரம், உள்ளிட பூக்கள் வெகுவாக குறைந்துள்ளது.

    செண்டுமல்லி முற்றிலும் விளைச்சல் தடைப்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறும் போது எந்த வருடமும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் தொடர் பனிப்பொழிவும் கடும் வெயிலும் வாட்டி வதைப்பதால் பூக்கள் விளைச்சலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கோடை முடிந்த பின்பு தான் பூக்களின் விளைச்சல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×