என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய  எச்சரிக்கை:  கிருஷ்ணகிரி அணையில் இருந்து வினாடிக்கு 6,443 கன அடி தண்ணீர் திறப்பு
    X

    கடல் போல் காட்சி அளிக்கும் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையை படத்தில் காணலாம்.

    5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை: கிருஷ்ணகிரி அணையில் இருந்து வினாடிக்கு 6,443 கன அடி தண்ணீர் திறப்பு

    • கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    • கரையோரம் வசிக்கும் மக்களுக்கு 3-வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏற்கனவே பெய்த மழையால் தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்பு பகுதிகளில் ஏரி, குளம், குட்டைகள் நிறைந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    அதன்படி நேற்று விநாடிக்கு 7,577 கனஅடி யாக வந்த நீர்வரத்து இன்று காலை 6 மணியளவில் விநாடிக்கு 6,936 கனஅடி யாக குறைந்து வந்தது. அணையில் இருந்து விநாடிக்கு 6,443 கனஅடி தண்ணீர் பிரதான மதகுகள் வழியாக திறந்து விடப்பட்டுள்ளது.

    இதனால் தென்பெண்ணை ஆற்றின் இருக்கரைகள் தொட்டப்படி தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. மேலும், அணைக்குள் தரைப்பாலம் மூழ்கிய தண்ணீர் சீறி பாய்ந்து செல்வதால், அவ்வழியே செல்ல சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    மேலும், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணமலை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு 3-வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் பொதுப்பணித்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

    மேலும், பொதுப்ப ணித்துறை, வருவாய்த்துறை யினர் மற்றும் காவல்துறை யினர் மூலம் கண்காணிப்பு பணிகளும் தீவிரப்ப டுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்யும் மழையால், அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்த னர்.

    Next Story
    ×