என் மலர்
உள்ளூர் செய்திகள்

கம்ைபநல்லூர் ஸ்ரீராம் பள்ளியில் மாணவர்களுக்கான முதலுதவி பயிற்சி
- பள்ளியின் தாளாளர்கள் வேடியப்பன் மற்றும் சாந்தி வேடியப்பன் தலைமை தாங்கினர்.
- முதலுதவி பற்றிய செவிலியர் ராதா மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
கம்பைநல்லூர்,
தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூரில் உள்ள ஸ்ரீராம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு முதலுதவி பற்றிய விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தினை பள்ளியின் தாளாளர்கள் வேடியப்பன் மற்றும் சாந்தி வேடியப்பன் தலைமை தாங்கினர். பள்ளி நிர்வாக இயக்குனர் தமிழ் மணி, திருமதி. பவானி தமிழ் மணி கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.
இக்கூட்டத்தில் முதலுதவி பற்றிய விளக்கங்களை செவிலியர் ராதா விளக்கப் படம் மூலம் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். இவ்விழாவில் பள்ளி முதல்வர் சாரதி மகாலிங்கம் மற்றும் ஒருங்கிணைப் பாளர்கள் திரு. குருமூர்த்தி, மணிமேகலை, பிரவீணா பங்கேற்றனர்.
விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஒருங்கிணைப்பாளர் புவனேஸ்வரி செய்திருந்தார்.
Next Story






