என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    பட்டாசு ஆலை வெடி விபத்தில்தலைமறைவான உரிமையாளர் கைது
    X

    பட்டாசு ஆலை வெடி விபத்தில்தலைமறைவான உரிமையாளர் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வெடி தயாரிக்கும் போது எதிர்பாரதவிதமாக இந்த திடீர் விபத்து நடந்திருக்கலாம் என தெரிகிறது.
    • நேற்று மாலை தலைமறைவான சரவணன் தானாக முன்வந்து பாப்பாரப்பட்டி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே நாகதாசம்பட்டியை சேர்ந்தவர் சரவணன். இவர் அப்பகுதி யில் பட்டாசு தயாரித்து விற்பனை செய்து வந்தார்.

    இந்த பட்டாசு ஆலை விபத்தில் அங்கு வேலை செய்து கொண்டிருந்த பழனியம்மாள்(50), முனியம்மாள்(65) ஆகிய இருவரும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த சிவாலிங்கம் (52) என்ற பெண் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    பட்டாசு குடோனில் ஒரு பகுதியில், கோவில் திருவிழா உள்ளிட்ட விழா விசேங்களுக்கு பயன்படுத்தக்கூடிய வானவெடி உள்ளி்ட்ட பட்டாசு ரகங்களை தயாரிப்பு பணியும், தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை சேமித்து வைக்க கூடிய குடோனும் செயல்பட்டு வந்தது.

    வெடி தயாரிக்கும் போது எதிர்பாரதவிதமாக இந்த திடீர் விபத்து நடந்திருக்கலாம் என தெரிகிறது.

    இது குறித்து மாவட்ட கலெக்டர் சாந்தி, மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    இந்த சம்பவம் தொடர்பாக பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வந்த நிலையில் பட்டாசு குடோன் உரிமையாளர் சரவணன் தலைமறைவானார்.

    இந்த நிலையில் நேற்று மாலை தலைமறைவான சரவணன் தானாக முன்வந்து பாப்பாரப்பட்டி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×