என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாணவிகளுக்கு தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட்டது.
போடியில் பள்ளி மாணவிகளுக்கு தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி
- போடி தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புத்துறை சார்பாக விபத்தில்லா தீபாவளி ஒத்திகை சிறப்பு பயிற்சி நடைபெற்றது.
- இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.
மேலசொக்கநாதபுரம்:
போடி அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் போடி தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புத்துறை சார்பாக விபத்தில்லா தீபாவளி ஒத்திகை சிறப்பு பயிற்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்தும், தீவிபத்தால் ஏற்பட்ட காயத்திற்கு முதலுதவி செய்வது குறித்து விளக்கப்பட்டது. மாணவிகளின் கேள்விக்கு தீயணைப்பு நிலைய அதிகாரி விரிவாக விளக்கம் அளித்தார்.
இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.
Next Story