என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண் திருமண தரகர் விபத்தில் பலி
    X

    பெண் திருமண தரகர் விபத்தில் பலி

    • இருசக்கர வாகனத்தில் மத்தூர்- திருப்பத்தூர் சாலையில் சென்றார்.
    • அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகேயுள்ள கொப்பம்பட்டியை சேர்ந்தவர் லட்சுமி (வயது 53). திருமண தரகர்.

    இவர் இருசக்கர வாகனத்தில் மத்தூர்- திருப்பத்தூர் சாலையில் சென்றார்.அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்று அவர் மீது மோதியது.

    இதில் படுகாயம் அடைந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×