என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண் கூலித்தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை
    X

    பெண் கூலித்தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை

    • கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது.
    • வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஓசூர், ஜூன்

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தேன்கனிக்கோட்டை சாலை ஆர்.கே.நகரைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி புஷ்பா (வயது38). கூலித்தொழிலாளி. இந்த நிலையில் அடிக்கடி கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது.

    இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த காணப்பட்ட புஷ்பா வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தாய் சந்திரா ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×