என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மரத்தில் இருந்து விழுந்த   7-ம் வகுப்பு மாணவன் சாவு
    X

    மரத்தில் இருந்து விழுந்த 7-ம் வகுப்பு மாணவன் சாவு

    • தேங்காய் பறிப்பதற்காக மரத்தில் எறியுள்ளான்.
    • மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சாந்தன் உயிரிழந்தான்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் சரகம் பாரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் திம்மராயசாமி. இவரது மகன் சாந்தன் (வயது 12). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 12-ந்தேதி அன்று தேங்காய் பறிப்பதற்காக மரத்தில் எறியுள்ளான். எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தான்.

    இதில் படுகாயமடைந்த சாந்தனை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சாந்தன் உயிரிழந்தான். இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×