என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நீட் தேர்வில் சாதனை படைத்த மாணவிக்கு பாராட்டு விழா
- நீட் தேர்வில் 720 க்கு 628 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார்.
- கலைமணிக்கு அறக்கட்டளை தலைவர் மோகன்ராசு பரிசு வழங்கி பாராட்டினார்.
மொரப்பூர்,
தருமபுரி மாவட்டம், மொரப்பூர் கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நீட் தேர்வில் சாதனை படைத்த மாணவிக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு கொங்கு கல்வி அறக்கட்டளை தலைவர் மோகன்ராசு தலைமை வகித்தார். அறக்கட்டளை செயலாளர் பிரபாகரன், பொருளாளர் சாமிக்கண்ணு, மொரப்பூர் கொங்கு கல்லூரி தாளாளர் பொன் வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளி தாளாளர் சந்திரசேகர் வரவேற்று பேசினார். இப்பள்ளியில் பயின்று நீட் தேர்வில் 720 க்கு 628 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மொரப்பூர் கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி கலைமணிக்கு அறக்கட்டளை தலைவர் மோகன்ராசு பரிசு வழங்கி பாராட்டினார்.
கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் சி.பி.எஸ்.சி. பள்ளி தாளாளர் சந்திரசேகர் மாணவிக்கு இனிப்புகள் வழங்கினார்.
இவ்விழாவில் கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாக இயக்குனர்கள் வெற்றிச்செல்வன், கணேசன், நாகராஜ், பரமசிவம், தமிழரசு, ராமு, குணசீலன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு இனிப்புகள் வழங்கி பாராட்டினார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்