என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
    X

    விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

    • அரூரில் விவசாயிகள் குறைத்தீர்க்கும் கூட்டம் நனைபெற்றது.
    • விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.

    தருமபுரி மாவட்டம் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் கோட்டாட்சியர் வில்சன் ராஜசேகர் தலைமை வகித்தார்.

    இக்கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-

    பாப்பிரெட்டிபட்டி பகுதியில் வேளாண் நிலங்கள், வீட்டு மனைப் பட்டா உள்பட பல்வேறு வகையான நில அளவீடு செய்யக் கோரும் கோப்புகள் அதிகம் கிடப்பில் உள்ளன. எனவே, நில அளவீடு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். நில அளவீடு பணிகள் குறித்து அறிவிப்பு பலகையில் பட்டியல் வெளியிட வேண்டும். தக்காளி பழங்களை ரேஷன் கடைகள் வழியாக விற்பனை செய்ய வேண்டும்.

    அரூரில் இருந்து காணாமல் போன மாவட்ட வன அலுவலகம் மற்றும் மாவட்ட கல்வி அலுவலகம் திரும்ப செயல்பட வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் கூட்டத்தில் வலியு றுத்தப்பட்டன. நிகழ்ச்சியில் வட்டாட்சியர் பெருமாள், துறை சார்ந்த அலுவலர்கள், முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், தருமபுரி சமூக சேவை மைய பணியாளர்கள் மற்றும் லயோலா சமூகப் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×