search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விலை வீழ்ச்சியால் முட்டைகோசுகளை ஏரியில் கொட்டிய விவசாயிகள்
    X

    விலை வீழ்ச்சியால் முட்டைகோசுகளை ஏரியில் கொட்டிய விவசாயிகள்

    • ராய க்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவில் முட்டைக்கோஸ் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
    • விளைச்சல் அமோகமாக உள்ளதால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை பகுதியில் நல்ல மழை பெய்ததால் விவசாயிகள் காய்கறிகள், கீரை வகைகள் பயிரிட்டு வருகின்றனர்.

    இந்தாண்டு தக்காளி க்கு போதிய விலை கிடைக்கா ததால் விவசாயிகள் மாற்று பயிராக காய்கறிகளை சாகுபடி செய்து வருகி ன்றனா்.

    இவற்றை அறுவடை செய்து ராயக்கோட்டையில் உள்ள காய்கறி மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இவற்றை வியாபாரிகள் வாங்கி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்களில் அனுப்பி வருகின்றனர்.

    இதனிடையே ராய க்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவில் முட்டைக்கோஸ் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    இவை தற்போது அறுவடை செய்யப்படுகிறது. விவசாயிகள் மூட்டை, மூட்டையாக காய்கறி மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.

    இதனால் மார்க்கெ ட்டுக்கு முட்டைக்கோஸ் வரத்து அதிகரித்துள்ளதால் அதன் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. ரகத்திற்கு ஏற்ப முட்டைக்கோஸ் விற்பனையாகிறது. அந்த வகையில் ஒரு மூட்டை ரூ.200-க்கும், ஒரு கிலோ சிறிய முட்டைக்கோஸ் ரூ.4-க்கும், 2 கிலோ கொண்ட முட்டைக்கோஸ் ரூ.7-க்கும் விற்பனையாகிறது.

    விலை வீழ்ச்சியால் கவலை அடைந்த விவசாயிகள் ஏாிகளில் முட்டைக்கோசை கொட்டி செல்கின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ராய க்கோட்டை பகுதிக ளில் அதிக அளவில் முட்டைக்கோஸ் பயிரிட ப்பட்டுள்ளது.

    தற்போது விளைச்சல் அமோகமாக உள்ளதால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

    இதனால் முட்டைக்கோஸ் சாகுபடி செய்த விவசாயிகள் ஏரிகளில் கொட்டி செல்கின்றனர். சிலர் கால்நடைகளை விட்டு மேய்த்து வருகின்றனர் என்று கவலையுடன் தெரிவித்தனர்.

    Next Story
    ×