என் மலர்
உள்ளூர் செய்திகள்

விவசாயிகள் சிறுதானிய பயிர்களை பயிரிட்டு நல்ல லாபம் பெறலாம், அதிகாரி தகவல்
- கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் சிறுதானிய பயிர்களை பயிரிட லாம் என்று வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்தார்.
- அதிக லாபம் கிடைப்பதாக தகவல்
சிறுதானியப் பயிர்களை பயி ரிட்டு நல்ல லாபம் பெறலாம் என, கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி வட்டா ரத்தை பொறுத்தவரை நல்ல மழை பெறப்பட்டுள்ளது. தற்போது இந்த மழையை பயன்படுத்தி சிறுதானிய பயிர்களான சாமை, குதிரைவாலி, தினை, வரகு போன்ற பயிர்களையும், பயறு வகைப் பயிர்களாகன உளுந்து, காராமணி, கொள்ளு போன்ற பயிர்களையும் விதைப்பு செய்ய தகுந்த பருவமாக உள்ளதால், தரிசாக உள்ள நிலங்களையும், ஊடுபயிர் செய்யாமல் உள்ள நிலங்களையும் விதைப்பிற்கு பயன்படுத்தி கூடுதல் மகசூல் பெற்று பயன்பெறலாம்.
சிறுதானியங்கள், பயறு வகைப் பயிர்களின் விதைகள், உயிர் உரங்கள், நுண்ணுாட்ட உரங்கள், உயிர் எதிர்காரணிகள் போன்றவை மானிய விலையில் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது. சத்தான நஞ்சில்லா உணவிற்கு பயறு வகைகள், சிறுதானியங்கள் மிகவும் அவசியம்.
இந்த விவசாயத்தை ஊக்குவிக்கும் பொருட்டு மத்திய, மாநில அரசுகள் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு என்ற திட்டத்தின் கீழ் மானியங்கள் வழங்கி வருகிறது. இதை வலியுறுத்தி கிருஷ்ணகிரி வட்டாரம் முழுவதும் வாகனங்கள் மூலம் ஒலி பெருக்கி வைத்தும், துண்டு பிரசுரங்கள் மூலமாகவும் பரவலாக விளம்பரம் செய்யப்பட்டது.
மேலும், விவரங்களுக்கு தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்கள் அல்லது கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகலாம். சரியான பருவம், தரமான விதைகள் மற்றும் சீரான தொழில் நுட்பங்களை பின்பற்றி விவசாயிகள் நன்முறையில் விவசாயம் செய்து கூடுதல் லாபம் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






