search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டியில் சூரிய சக்தி பம்பு செட்டுகளை மானிய விலையில் பெற்று விவசாயிகள் பயன்
    X

    ஊட்டியில் சூரிய சக்தி பம்பு செட்டுகளை மானிய விலையில் பெற்று விவசாயிகள் பயன்

    • சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் விவசாயிகளுக்கு 70 சவீதம் மானியத்தில் அமைத்து கொடுக்கப்படுகிறது.
    • இத்திட்டத்தின் கீழ் 84 பயனாளிகளுக்கு ரூ.1.65 கோடி மானியத்தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.

    ஊட்டி,

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை தீட்டி சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார்.

    கிராமப்புற விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், வருமானத்தையும் பெருக்கும் நோக்கில் வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் நில மேம்பாட்டு திட்டங்கள், சிறுபாசன திட்டங்கள், பாசன பகுதி மேம்பாடு மற்றும் நீர் மேலாண்மை திட்டம், பண்ணைக்குட்டைகள் அமைத்தல், வேளாண் கருவிகளை மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்குதல், சூரிய மின் சக்தி பம்ப் செட் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    வேளாண் பொறியியல் துறையின் சார்பில் முதல்-அமைச்சரின் சூரிய சக்தி பம்ப் செட்டுகள் திட்டத்தின் கீழ் மானிய விலையில் தனித்து சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் அமைக்க விருப்பமுள்ள விவசாயிகள் மற்றும் விவசாய குழுக்களுக்கு, பாசன வசதிக்காக மின் கட்டமைப்புடன் சாராதா தனித்து சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் விவசாயிகளுக்கு 70 சவீதம் மானியத்தில் அமைத்து கொடுக்கப்படுகிறது.

    இத்திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்திற்கு 2021-22 மற்றும் 2022-23-ம் ஆண்டில் 84 எண்கள் ஒதுக்கீடு பெறப்பட்டு பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. முதல்-அமைச்சரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் திட்டத்தின் கீழ் 84 பயனாளிகளுக்கு ரூ.1.65 கோடி மானியத்தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் மாநில அரசின் பங்கு ரூ.94.47 லட்சம் மற்றும் மத்திய அரசின் பங்கு ரூ.70.85 லட்சம் ஆகும். இதில் ஆதி திராவிட மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த 14 பயனாளிகளுக்கு 20 சதவீதம் கூடுதல் மானியத்ெதாகை ரூ.8.42 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வேளாண் விளை பொருட்களை மதிப்பு கூட்டும் எந்திரங்கள் வழங்குதல் திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் 221 விவசாயிகளுக்கு தேயிலை அறுவடை எந்திரம் மானியத்தில் வழங்கப்பட்டு உள்ளது.

    முதல்-அமைச்சரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் திட்டத்தின் கீழ் பயன் அடைந்த விவசாயி பேச்சி யம்மாள் கூறியதாவது:-

    நான் ஊட்டி இத்தலார் கிராமத்தில் வசித்து வருகிறது. எங்களுக்கு 2 ஏக்கர் நிலம் உள்ளது. இந்நிலத்தில் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் 5 எச்.பி. திறன் கொண்ட சூரியசக்தி பம்பு செட்டு தாழ்த்தப்பட்ட வகுப்பினை சே்ந்த எனக்கு 90 சதவீதம் மானியத்தில் சூரிய சக்தி பம்பு செட்டு அமைத்து கொடுத்தார்கள். இதன் விலை ரூ.2 லட்சத்து 73 ஆயிரத்து 548. எங்களது பங்களிப்பாக ரூ.33 ஆயிரத்து 254 மட்டுமே செலுத்தினோம். எங்களது நிலத்தில் தெளிப்பு நீர் பாசன அமைப்பு அமைக்கப்பெற்று சூரிய சக்தி பம்பு செட்டுடன் இணைக்கப்பட்டு உள்ளது. அதனால் எங்களுக்கு குறைந்த நீரில் பாசனம் செய்ய முடிந்தது. மேலும் டீசல் வாங்குவதற்கான பணமும், நேரமும் மிச்சமாகிறது. இதன் மூலம் லாபம் ஈட்ட முடிகிறது. இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஊடி இத்தலார் பகு தியைச் சேர்ந்த விவசாயி மூர்த்தி கூறியதாவது:-

    சூரிய சக்தி பம்பு செட்டுடன் தெளிப்பு நீர் பாசன அமைப்பினை இணைத்துள்ளதால் குறை வான தண்ணீரில் முழுமை யாக பாசனம் செய்ய முடிகிறது. உற்பத்தி செலவு குறைந்து லாபம் ஈட்ட முடிகிறது. எங்களை போன்ற விவசாயிகளின் நலனினை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×