என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.
கள்ளிமந்தயத்தில் சிப்காட் அமைக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு
- கூட்டத்தின்போது கள்ளிமந்தையம் பகுதியில் காய்கறி விவசாயம் அதிகமாக நடைபெறுகிறது. எனவே விளை நிலத்தில் சிப்காட் அமைக்க கூடாது.
- பா.ஜ.க. நிர்வாகிகள் பேசும்போது, சிப்காட் அமைக்க பழனி முருகன் கோவில் நிலத்தை கையக ப்படுத்தினால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.
பழனி:
ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தையத்தில் சிப்காட் அமைப்பது குறித்து விவசாயி களுடனா ன ஆலோசனை கூட்டம் பழனி ஆர்.டி.ஓ. அலு வலகத்தில் நடைபெற்றது.
இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் சேக் முகைதீன் தலைமை தாங்கினார். பழனி ஆர்.டி.ஓ. சரவணன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒட்ட ன்ச த்திரம், கள்ளிமந்தையம், பழனி பகுதியை சேர்ந்த விவசாயிகள், நாம் தமிழர் கட்சி, பா.ஜ.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தின்போது கள்ளிமந்தையம் பகுதியில் காய்கறி விவசாயம் அதிகமாக நடைபெறுகிறது. எனவே விளை நிலத்தில் சிப்காட் அமைக்க கூடாது.
இங்கு சிப்காட் வந்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது. எனவே சிப்காட் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து பேசும்போது, கள்ளிமந்தையம் பகுதியில் சிப்காட் அமைக்க பெரும் எதிர்ப்பு நிலவுகிறது.
எனவே அங்கு சிப்காட் அமைக்கப்பட மாட்டாது என்ற அறிவிப்பு வரும்வரை போராட்டம் நடைபெறும் என்றார். அதேபோல், பா.ஜ.க. நிர்வாகிகள் பேசும்போது, சிப்காட் அமைக்க பழனி முருகன் கோவில் நிலத்தை கையக ப்படுத்தினால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.
பின்னர் அதிகாரிகள் பேசும்போது, சிப்காட் அமைப்பது பற்றி விவசாயிகளிடம் விளக்க கூட்டம் தான் நடத்தி வருகிறோம்.
எனவே சிப்காட் அமைக்க ஆட்சேபனை தெரிவிக்கும் விவசாயிகள், அரசியல் கட்சிகள் மனு க்களாக மாவட்ட நிர்வா கத்திடம் அளிக்க லாம். இந்த மனுக்கள் குறித்து உயர் அதிகா ரிகளுக்கு தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.






