search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகள் கிரேயின்ஸ் வலைத்தளத்தில் பதிவு செய்ய வேண்டுகோள்
    X

    விவசாயிகள் கிரேயின்ஸ் வலைத்தளத்தில் பதிவு செய்ய வேண்டுகோள்

    • தமிழ்நாடு அரசு அளித்து வரும் பல்வேறு நலத்திட்டங்களை விவசாயிகள் பயன் பெறும் வகையில் ஒரே இடத்தில் பதிவு செய்ய ஏதுவாக வேளாண் அடுக்ககம் கிரேயின்ஸ் வலைதளம் அமைக்கப்பட்டு உள்ளது.
    • இந்த வலைதளத்தில் தங்களது நில விவரங்களுடன், விவசாயிகளின் விவரங்களையும் இணைக்க வேண்டும்.

    மேட்டூர்:

    கொளத்தூர் வேளாண்மை உதவி இயக்கு னர் ராஜகோபால் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தமிழ்நாடு அரசு அளித்து வரும் பல்வேறு நலத்திட்டங்களை விவசாயிகள் பயன் பெறும் வகையில் ஒரே இடத்தில் பதிவு செய்ய ஏதுவாக வேளாண் அடுக்ககம் கிரேயின்ஸ் வலைதளம் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த வலைதளத்தில் பேரிடர் மேலாண்மைத் துறை, வேளாண்மை துறை, கூட்டுறவுத்துறை, பட்டு வளர்ச்சித்துறை, உணவு வழங்கல் துறை உள்பட 13 துறைகளில் இணைக்கப்பட்டு உள்ளது.

    இந்த வலைதளத்தில் தங்களது நில விவரங்க ளுடன், விவசாயிகளின் விவரங்களையும் இணைக்க வேண்டும். இதன்மூலம் அரசின் நலத்திட்டங்கள் சரியான பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதிப்ப டுத்த முடியும்.

    விவசாயிகள் அனைத்து பயன்களுக்கும் ஒரே இடத்தில் பதிவு செய்து அரசின் உதவிகளை பெற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு முறையும் பயன்பெற விவசாயிகள் விண்ணப்பிக்கும் போது ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியதில்லை.

    விவசாயிகள் நேரடியாக வலைதளத்தில் பதிவு செய்தால் முன்னுரிமை அடிப்படையில் அரசின் பலன்களை பெற்றுக் கொள்ளலாம். மேலும் இந்த வலைதளத்தில் விவசாயிகள் தங்கள் ஆதார் அட்டை நகல், புகைப்பட நகல், வங்கி கணக்கு புத்தகங்கள், நிலப் பட்டா ஆவண நகல் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும்.

    எனவே கொளத்தூர் வட்டார விவசாயிகள், ஆவணங்களை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் அல்லது உதவி வேளாண்மை அலுவலர் அல்லது உதவி தோட்டக்கலை அலுவலரி டம் வழங்கி, அடிப்படை விவரங்களை பதிவு செய்து, அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்று பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×