என் மலர்
உள்ளூர் செய்திகள்

அய்யலூர் அருகே வளவிசெட்டிபட்டி கிராமத்தில் கொடி தக்காளி சாகுபடி செய்துள்ள விவசாயிகள்.
அய்யலூரில் கொடி தக்காளி சாகுபடிக்கு தயக்கம் காட்டும் விவசாயிகள்
- ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை செல வாகும் என்பதால் பெரும்பா லான விவசாயிகள் கொடி த்தக்காளி சாகுபடி செய்ய தயக்கம் காட்டுகின்றனர்
- விளைச்சல் அதிகரித்து விலைகுறையும் சமயங்களில் அதனை பதப்படுத்தி வைக்க குளிர்பதன கிட்டங்கி அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, அய்யலூர், எரியோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் தக்காளியை பயிரிட்டு வருகின்றனர்.
பலவகை தக்காளி விதைகளை நடவு செய்து தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப உற்பத்தி திறனை அதிகரித்து வருகின்றனர். 3 முதல் 6 மாதங்கள் வரை தக்காளி அறுவடை செய்து விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. ஒரு நாற்று ரூ.1 முதல் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு பந்தல் அமைத்து, களை எடுத்து கொடிபோல் படரச்செய்து பராமரித்து வருகின்றனர்.
இதற்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை செல வாகும் என்பதால் பெரும்பா லான விவசாயிகள் கொடி த்தக்காளி சாகுபடி செய்ய தயக்கம் காட்டுகின்றனர். ஏனெனில் வருடத்தின் பெரும்பாலான மாதங்களில் தக்காளிக்கு போதிய விலை கிடைப்பதில்லை.
இதனால் தக்காளியை பறிக்காமலும், பறித்த பழங்களை குப்பை யில் கொட்டிச்செல்லும் நிலையும் உள்ளது. பல ஆண்டுகளாக தக்காளியை பதப்படுத்தி பல்வேறு பொருட்கள் செய்யும் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கை யாக வைக்கப்பட்டும் இதுவரை நிறைவேற்ற ப்படாமல் உள்ளது.
இதனால் இப்பகுதி விவ சாயிகளுக்கு கொடிப்பந்தல் தக்காளி நடவு முறை, விளைச்சல் அதிகரிப்பு குறித்து வேளாண் அதிகாரி கள் உரிய ஆலோசனை வழங்குவதோடு மானியத் ெதாகையும் வழங்க வே ண்டும். மேலும் விளைச்சல் அதிகரித்து விலைகுறையும் சமயங்களில் அதனை பதப்படுத்தி வைக்க குளிர்பதன கிட்டங்கி அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.






