search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிணற்றில் தவறி விழுந்து விவசாயி சாவு
    X

    கிணற்றில் தவறி விழுந்து விவசாயி சாவு

    • சம்பவத்தன்று தனது நிலத்தில் இருந்த மரத்தில் ஒன்று மீது ஏறி அரிவாளல் கிளைகளை வெட்டி கொண்டிருந்தார்.
    • திடீரென்று மரத்தின் மீது இருந்து தவறி அருகில் இருந்த கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    காவேரிப்பட்டணம்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஜெகதாப் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி (வயது65). விவசாயி. இவர் சம்பவத்தன்று தனது நிலத்தில் இருந்த மரத்தில் ஒன்று மீது ஏறி அரிவாளல் கிளைகளை வெட்டி கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென்று மரத்தின் மீது இருந்து தவறி அருகில் இருந்த கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கண்ட உறவினர்கள் உடனே காவேரிப்பட்டணம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    தகவலறிந்த போலீசார் உடனே அங்கு வந்து மணியின் உடலை கிணற்றில் இருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×