search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேன் மோதி விவசாயி சாவு
    X

    வேன் மோதி விவசாயி சாவு

    • எதிர்பாராத விதமாக எதிரே வந்த வேன் ஒன்று அவர் மீது மோதியது.
    • சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியை அடுத்த எட்டிக்கல் அகரம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது40). விவசாயி.

    இவர் சம்பவத்தன்று ராயக்கோட்டை-கிருஷ்ணகிரி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த வேன் ஒன்று அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் தகவலறிந்து அங்கு விரைந்து வந்து சக்திவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×