search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பைக் மோதி விவசாயி சாவு
    X

    பைக் மோதி விவசாயி சாவு

    • விவசாயியான இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் சூளகிரிக்கு சென்றார்.
    • எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் அவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே குட்டுகொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் அழகேசன் (வயது39).

    விவசாயியான இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் சூளகிரிக்கு சென்றார்.

    அப்போது அவர் பாலனம்பட்டி அருகே ராயக்கோட்டை-சூளகிரி சாலையில் வந்தபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் அவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாய மடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ராயக் கோட்டை போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×