search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கார் மோதி விவசாயி சாவு
    X

    கார் மோதி விவசாயி சாவு

    • கர்நாடகா மாநிலம் பதிவெண் கொண்ட கார் ஒன்று அர்ஜூனன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை தீர்த்தகிரி வலசை பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜூனன் (வயது65). விவசாயியான இவர் தனது மோட்டார் சைக்கிளில் சிங்காரப்பேட்டையில் இருந்து தனது வீட்டிற்கு சென்றார்.

    அப்போது அவர் தீர்த்தகிரிவலசைக்கு வந்தபோது எதிரே வந்த கர்நாடகா மாநிலம் பதிவெண் கொண்ட கார் ஒன்று அர்ஜூனன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் தலையில் பலத்த காயமடைந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த சிங்காரப்பேட்டை போலீசார் உடனே அங்கு விரைந்து வந்து அர்ஜூனன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×